இத்யாதி....

>> Sunday, 22 November 2009

இத்யாதி 1....

ஒரு வாரமாக எதுவுமே எழுதவில்லை.காரணம் என்று-வேலை அதிகம்.மனசு சரியில்லை என்று ஆயிரம் சொல்லலாம். வலிமையான ஒரே காரணம் எழுதும் மனநிலை வாய்க்கவில்லை. இடையில் மெயிலிருந்து போஸ்ட் செய்யும் வசதியில் தவறுதலாக ஏதோ லாட்டரி சேதி ப்ளாக்கில் போஸ்ட் ஆகி நண்பர்கள் பின்னூட்டமும் போட்டார்கள். எதேச்சையாய் நடந்த விடயம் எனினும் பணத்துக்காக அலையும் நாட்களில் இது அமானுஷ்யமாகவே இருந்தது.

வேறென்ன? இப்படி ஏதும் லாட்டரி அடித்து விடாதா என்றே தோன்றுகிறது. இதோ இந்தப் பக்கத்தின் வலதுபுறம் இருக்கும் வீடு விளம்பரத்தை உங்களில் யாரும் பார்த்து வாங்க எத்தனித்தீர்களாயின் அதுவே எனது இந்த நிமிடத்தின் லாட்டரி.

இத்யாதி 2....

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேதனை. ப்ரச்னை எனினும் அதை எதிர்கொள்ளும் வலிமை வேறு வேறு. போன செவவாய்க்கிழமை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுத நினைத்தேன். அன்புள்ள கடவுளுக்கு என்று ஆரம்பிக்கவா என்று நெடுநேரம் யோசித்தேன். ஆரம்ப நாட்கள் முதலாகவே இழப்புகளை சுமந்த வாழ்க்கையை ஏன் எனக்கு ப்ளான் பண்ணினாய் என்று கேட்கலாம் என்று தோன்றிற்று.சில நேரங்களில் சுற்றிப் பார்க்கும் போது எல்லாருமே சந்தோஷமாக கடந்து போவது போல் தோன்றுகிறது.

அந்த மாதிரியான நேரங்களில் நல்ல பாடல்கள் கேட்கத் தோன்றுகிறது எனக்கு. இந்த வாரத்தின் ஆறுதலைத் தந்தது---கண்டேன் காதலையில் வரும் “ நான் மொழி அறிந்தேன்”
நநதலாலாவின் ”ஒண்ணுக்கொன்னு துணையிருக்கும் உலகத்துல”

அம்முவுக்குப் புரியும்.

இத்யாதி 3....

கனமான மனசூழலின் நடுதருணத்தில் சந்திராவின் அலைப்பேசி அழைப்பு வந்தது. மனமாற்றங்களுக்காக நினைவுகளை சேகரித்த மனதோடு பேசும் ஸ்நேகிதியுட்ம் என்ன சொல்ல? வழக்கம் போல் நான் மன்மோகன் பேத்தி பேசுறேன் என்றேன். சந்திரா அந்தப் பக்கம் கலகலவேன சிரித்தது என் கண் ஈரத்தில் மினுங்கிற்று. என் பேஸ்புக்கில் சந்திரா எழுதிய வரிகளில் கரைந்து போனபடி அலைந்து கொண்டிருக்கிறேன்.காற்றில் அலையும் சிறகாய்...

இத்யாதி 4....


ஒரு நாள் மதியம் ஆர்.கே நடித்த எல்லாம் அவன் செயல் படம் பார்த்தேன். கதை நன்றாகத் தானிருந்தது. வர்க்க வேறுபாடுகளின் வலியை சொல்லும் கதையில் சஸ்பென்ஸ் எலலாமே இருந்தும் ஏன் ஓடவில்லை படம் ?

ஆர்கே யாலா?

இத்யாதி 5....

தினகரன் ஞாயிறு இதழில் பா.ராகவனின் கதை பக்தன் வாசித்தேன். ராகவனின் வழக்கமான நையாண்டி நடை.பிள்ளையாரே பக்தனை நம்பி இருக்கிரார். அவரின் கோவிலை ப்ளாட்டிலிருந்து எடுத்து விட்டாலும் பக்தன அதை தடுப்பான் என்று கனவெல்லாம் கூட காண்கிறார்.கடைசியில் பக்தனை பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு கிணற்றுப் பக்கம் போகிறான். மனித மதிப்பீடுகளுக்கு கடவுளும் தப்புவதில்லை.

இனிமேல் பிள்ளையாரை பார்த்தால் ராகவனின் கதை ஞாபகம் வரும்.

மேலும வாசிங்க...

இங்கிட்டு த‌ம‌ய‌ந்தி..அங்கிட்டு யாரு..பாக‌ம் 21 :

>> Thursday, 12 November 2009

1.முத‌ல்ல‌ நிழ‌ல்வ‌லை ப‌த்தி அழ‌கா விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ண‌ ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ர்சிம்,ப‌ரிச‌ல்,சார‌தா (அமித்து அம்மா ), க‌திர்,நில‌வ‌னுக்கு ந‌ன்றிங்கோ! ந‌ல்லாருக்குனு சொல்லிருக்காங்க‌!கொஞ்ச‌ம் குஜாலாத்தேன் இருக்கு.பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள்ட்ட‌ ஷொட்டு வாங்கியாச்சில்லே!


2.இந்த‌ வார‌ம் ம‌ழை வார‌ம்.ஏர‌ல் ப‌க்கமா போக வாய்ச்சிது.அங்க‌ பால‌ம் மீறி த‌ண்ணி பாய்ஞ்ச‌துல‌ டிராபிக் க‌ட். பால‌த்தின் இரு க‌ரைக‌ளிலும் வ‌லை க‌ட்டி விட்டிருந்தார்க‌ள். மீன் துள்ளும் போது வ‌லையில் வ‌ந்து தானாக‌ மாட்டிக் கொள்கிற‌து. பெரிய‌ க‌ட்லா மீன்க்ள். பிடிப‌ட்டும் 3 ம‌ணி நேர‌ம் உயிரோடு போராடிக் கொண்டிருந்த‌து.

யார் வீட்டு மீன் குழ‌ம்புக்காக‌ பிற‌ப்பெடுத்தாயோ?

3.இன்னிக்கு சித்ரா ஒரு மின்ன‌ஞ்ச‌ல் போட்டிருந்தா :


அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பஸ்-க்கு திருமணம் ஆகியிருந்தால்..


ஏங்க எங்கே போறீங்க?

யார்கூட போறீங்க?

ஏன் போறீங்க?

எப்படி போறீங்க?

என்ன கண்டுபிடிக்க போறீங்க?

ஏன் நீங்க மட்டும் போறீங்க?

நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?

நானும் உங்ககூட வரட்டுமா?

எப்ப திரும்ப வருவீங்க?

எங்கே சாப்பிடுவீங்க?

எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?

பதில் சொல்லுங்க ஏன்?

நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?

நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.

ஏன் பேசமா இருக்கீங்க?

என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?

இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?

எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?

இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க??


அட‌ பாவ‌மே..நேற்று ஒரு மாப்பிள‌ளை அழைப்பு. மாட்டிக்கிட்டான்னு தோழி சொன்னா...


கிடா வெட்ட‌ ஆட்டை ஊர்வ‌லமா எடுத்து போவாங்க‌ளா என்ன‌?

4.ஒரு வழியா எடியூர‌ப்பா ப்ர‌ச்னை முடிஞ்சி ரெட்டி ச‌கோத‌ர‌ர்க‌ளோட‌ கேக் ஊட்டிக்கிட்டாக‌லூ..

ஒரு வாய் ஊட்டிப்போட்டு "ஏம்ல‌ இவ்ளோ ப்ர‌ச்னை ப‌ண்ண‌..ந‌ல்லாருப்பியா நீ"னு ம‌ன‌சுக்குள்ள‌ நினைச்சிக்கிட்டே போட்டோக்கு சிரிக்க‌ணும். ஆ வாங்கிட்டு " ஷோபாவுக்கு இவ்ளோ இட‌ம் கொடுப்பியா..நாங்க‌ யாருனு காட்றோம்"னுட்டு ம‌றுப‌டி ஒரு சிரிப்பு.




அந்த‌ கேக்குக்கு ம‌ட்டும் உசிர் இருந்தா...

5.சின்ம‌யியை ஒரு பேட்டி எடுக்க‌ வேண்டியிருந்த‌து. முத‌ல் முத‌லா ப‌ள்ளி போட்டிக்காக‌ தேசுலாவுதே தேன் ம‌ல‌ராலே பாட்டை பாடினேன்னு சொன்னாங்க‌. வ‌ழ‌க்க‌ம் போல‌ ஒரு சில‌ வ‌ரிக‌ள் பாடுங்க‌னேன். பிலீவ் மீ.. ஒரு நிமிஷ‌ம் ஆடிப் போயிட்டேன். என்ன‌ ஒரு க‌ம்பீர‌மான‌ குர‌ல்.



இப்ப‌ல‌ருந்து எப்ப‌வும் நான் சின்ம‌யி ர‌சிகை ர‌சிகை ர‌சிகை!


6. அலுவ‌ல‌க‌த்துல‌ பெண்க‌ள் உய‌ர் ப‌த‌வில‌ருந்தா ஒரு ந‌ன்மைனு கார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள்ல‌ க‌ண்டுப்பிடிச்சு சொல்லிருக்காங்க‌ அமெரிக்கால‌.அதாச்சும் அவ‌ங்க‌ளுக்கு ஒரு அபிஷிய‌ல் ம‌த‌ர் (அலுவ‌ல‌க‌ அம்மா?)குன‌ம் வ‌ந்துடுற‌தால‌ ஊழிய‌ர்க‌ளுக்கு ஆபிஸ் மேல‌ ஒரு உண‌ர்வுப்பூர்வ‌மான‌ உற‌வு வ‌ந்துடுதாம்.


ஆபிஸ்ல‌ யாராச்சும் தும்மினா கூட‌ துள‌சி க‌ஷாய‌ம் கொடுக்கும் ம‌ம்மிக‌ளை என‌க்கும் தெரியுமே!


7.அப்புற‌ம் நாளைக்கு ச‌னிக்கிழ‌மை. நாளை ம‌றுநாள் ஞாயிற்றுக்கிழ‌மை.எண்ணெய் தேய்ச்சிக் குளிங்க‌. கீரை சாப்பிடுங்க‌. மானாட‌ ம‌யிலாட‌ல‌ க‌லாக்கா இஸ்கூல் புள்ள‌ மாதிரி வ‌ர்ற‌த‌ பாருங்க‌.
ம‌ற‌க்காம‌ இதுக்கு பின்னூட்ட‌மும் ஓட்டும் போடுங்க‌.

க‌லைஞ‌ர்ட்ட‌ சொல்லி உங்க‌ளுக்கு ஒரு டி.வி பொட்டி என் செல‌வுல‌ வாங்கித் தாரேன்.

(ப‌ட‌ம் மாறிருச்சுனு யாரும் பின்னுட்ட‌ம்போட்டுராதீங்க‌..சொல்லிக்கிறேன்..சொல்லிக்கிறேன்...இது நான்‍லீனிய‌ர் ப‌திவு)

மேலும வாசிங்க...

ராய‌ல் தியேட்ட‌ரும் உத‌ய‌கீத‌மும்...

1.அப்போது என‌க்கு ப‌த்து வ‌ய‌திருக்கும். எப்போது சினிமா பார்க்க‌ணும்னாலும் அப்பா எங்க‌ளை அசோக் தியேட்ட‌ருக்குத் தான் கூட்டிட்டுப் போவார். என்ன‌ சென்ட்ர‌ல் தியேட்ட‌ர்ல‌ ஓட்டின‌ ப‌ட‌ங்க‌ளை அசோக்கில் ஒரு மாத‌ம் க‌ழித்து போடுவார்க‌ள். சினிமாவுக்குப் போவ‌தென்ப‌து எங்க‌ளுக்கு அப்போதெல்லாம் திருவிழாவிற்குப் போவ‌து போல்.


என்ன‌ டிரெஸ் போட‌ என்ப‌திலிருந்து அம்மாவை ஸ்பெஷ‌லா ப‌ண்ட‌ம் செய்ய‌ சொல்லி கொண்டுப் போவோம்.அங்கு விற்கும் எதையும் சுத்த‌மில்லாத‌ கார‌ண‌த்தால் அம்மா வாங்க‌ விட‌ மாட்டார். பாளை மார்க்கெட் வ‌ழியாக‌ப் போகும் 5ஏ,5பி ப‌ஸ் பிடித்து அன்ன‌ப்பூர்ணா ஸ்டாப்பில் இற‌ங்கி போக‌ வேண்டும். அடுத்த‌ நாள் க்ளாசில் போய் க‌தை எல்லாம் சீன் சீனா ம்யூசிக்கோடு க‌ரெக்ட்டா சொல்லிறுவேன்(அப்ப‌டித் தானே அம்மு,சித்ரா?).


சென்ட்ர‌ல் தியேட்ட‌ர் ந‌ளினியோட‌ அப்பாவோட‌து என்ப‌தால் அவ‌ங்க‌ தான் அசோக் தியேட்ட‌ரையும் வ‌ச்சிருக்காங்க‌ளானு எங‌க‌ளுக்குள்ள‌ ப‌ய‌ங்க‌ர‌ விவாத‌ம்லாம் வ‌ந்திருக்கு. "அப்ப‌டில்லாம் இல்ல‌ப்பா"னு ந‌ளினி எப்ப‌வுமே ம‌றுத்திருக்கா. இப்ப‌ அசோக் தியேட்ட‌ர் இல்லை. அந்த‌ப் ப‌க்க‌ம் போகும் ச‌ந்த்ர்ப்ப‌மே இல்லாத்த‌னால‌ அது க‌ல்யாண‌ம‌ண்ட‌ப‌மா, ப்ளாட்டா மாறிறுச்சானு என‌க்குத் தெரிய‌வில்லை.

சென்ட்ர‌ல் தியேட்ட‌ர்ல‌ இப்ப‌ "ப‌ருவ‌ கும‌ரி " ப‌ட‌மெல்லாம் போடுறாங்க‌. அப்ப‌ப்ப‌ எம்.ஜி.ஆர் ப‌ட‌ம்.


ரெண்டும் தான் த‌மிழ்நாட்டுல‌ இப்ப‌ வ‌ரைக்கும் ஓடுது?

2.ரெட்டை மேம்பால‌த்துக்கு கீழ‌ பால‌ஸ் ‍டி ‍வேல்ஸ் தியேட்ட‌ர் இருக்கும். டிக்கெட் கொடுக்கிற‌ வ‌ரைக்கும் கேட் திற‌க்க‌ மாட்டாங்க‌.அப்புற‌மா அங்கிட்டு இருக்கிற‌ க‌ண்ண‌ன் சிலைக்கு மாலை போடுவாங்க‌. அப்ப‌ ஒரு சைர‌ன் அடிக்கும். உட‌னே டிக்கேட் கொடுக்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌.விய‌ட்நாம் வீடுங்கிற‌ ப‌ட்த்துக்கு ப‌த்மினி ரொம்ப‌ அழ‌கா இருப்பாங்க‌னு கூட்டிட்டுப் போனாங்க‌.எங்க‌ ம‌துரை வெனி சித்தி ப‌த்மினி ப‌த்தி பேசிக்கிட்டே இருந்தாங்க‌. இன்ட்ர‌வ‌ல்ல‌ என் த‌ம்பி விவி அவ‌ங்க‌ளைப் பார்த்து "ப‌த்மினி ப‌த்மினினு சொன்னீங்க‌ளே !அவ‌ங்க‌ எப்ப‌ வ‌ருவாங்க‌?"னு கேட்டான்.

ப‌ட‌ம் பூராவும் சிவாஜி ஜோடியா ப‌த்மினி அழுது க‌ண்ணீர் விட்ட‌தை அவ‌ன் நினைத்துக் கூட‌ப் பார்க்காத‌தை நான் ப‌த்மினியை அவ‌ங்க‌ளோட‌ மைலாப்பூர் இல்ல‌த்துல‌ பேட்டிக்காக‌ ச‌ந்தித்த‌போது நினைத்தேன்."கால்ல‌ 3 மெட்டி போட்டிருகியேம்மா?"என்று கேட்ட‌ ப‌த்மினியிட‌ம் அன்பு ம‌ட்டுமே இருந்த‌து."என‌க்கு லிப்ஸ்டிக்னா உசிரு"என்று சிறுகுழ‌ந்தையாய் சிரித்து மேக்‍க‌ப் கிட்டில் இருந்த‌ 250க்கும் மேற்ப‌ட்ட‌ ப்ராண்டை காட்டினார்.

இப்ப‌ பால‌ஸ் டி வேல்ஸ் தியேட்ட‌ர் ப‌ண்டார‌விளை நாடார் மாவுக‌ட்டு போடும் இட‌மாகி விட்ட‌து.காலை ஆறு ம‌ணிக்கு கீழே விழுந்த‌,சுளுக்கிய‌ வ‌லியோடு ம‌னித‌ர்க‌ள் கூடுகிறார்க‌ள்.


ஆனால் அந்த‌ க‌ண்ண‌ன் சிலை இப்போது அங்கில்லை.


3.உத‌ய‌கீத‌ம் ப‌ட‌ம் வ‌ந்த‌போது எங்க‌ள் வீட்டுக்கு எங்க‌ள் அத‌தை வ‌ந்திருந்தார். என் அத்தைப் பெண் ராஜாத்தியைக் கூட்டிக் கொண்டு உத‌ய‌ கீத‌ம் ப‌ட‌ம் பார்க்க‌ ராய‌ல் தியேட்ட‌ருக்குப் போனோம். ராய‌ல் தியேட்ட‌ருக்கு ரெண்டு வாச‌ல் உண்டு.ஒன்று ர‌த‌வீதி வ‌ழியாக‌. ம‌ற்றொன்று நைனார் குள‌ம் வ‌ழியாக‌. ப‌ட‌ம் பார்த்து விட்டு நைனார் குள‌ம் வாச‌ல் வ‌ழியாக‌ ப‌ஸ் ஏறுவ‌தால் அது கிட்ட‌த்த‌ட்ட‌ வீட்டின் புழ‌க்க‌டை மாதிர்யே ஆயிற்று.


உத‌ய‌கீத‌ம் ப‌ட‌த்துல‌ இன்ட்ர‌வ‌லுக்கு முன்னால‌ ரேவ‌தி மோக‌னை க‌த்தியால‌ குத்துவாங்க‌. ராஜாத்தி அவ்வ‌ள‌வா ப‌ட‌ம் பார்த்த‌தில்லை. ப‌டார்னு "ஐயோ குத்திட்டாளே"னு க‌த்திட்டா. ப‌ட்டுனு விள‌க்குலாம் இன்ட்ர‌வ‌ல்ங்கிர‌துனால‌ போட்டுட்டாங்க‌. அவ‌ளுக்கு ரொம்ப‌ வெக்க‌மா போயிருச்சு. ஒரு வார‌மா அவ‌ளை இதை சொல்லியே வீட்டுல‌ அழ‌ வ‌ச்சோம்.

கொஞ்ச‌ வ‌ருஷ‌ம் க‌ழிச்சு ம‌வுன‌ ராக‌ம் ப‌ட‌த்தை ஒரு 7,8 வாட்டி ராய‌ல் தியேட்ட‌ர்ல‌ பார்த்திருக்கேன்.ஆனா இப்ப‌ தியேட்ட‌ரை அடைச்சிட்டாங்க‌. போத்தீஸ் அதை வாங்கிட்ட‌தாக‌ கூட‌ வ‌த‌ந்திலாம் வ‌ந்துச்சு. எது உண்மைனு தெரில‌.

சிவ‌ச‌க்தி டாக்கீஸ்ல‌,அப்புற‌மா லெக்ஷ்மி டாக்கீஸ்ல‌ அந்த‌ கால‌ம் இங்லீஷ் ப‌ட‌ங்க‌ளை போடுற‌துனால‌ ச‌த்ய‌ம் தியேட்ட‌ர் ரேஞ்சுல‌ காண்பிச்சிப்பாங்க‌.அவ‌ங்க‌ ஸ்கீரின் தூக்குற‌ப்ப‌ போடுற‌ ம்யூசிக்கே ப‌ய‌ங்க‌ர‌ அப்பீஷா இருக்கும்.இப்ப‌ பேரின்ப‌விலாஸ் தியேட்ட‌ர்ல‌ போடுற‌ பாப்கார்ன் ம்யூசிக் முன்னால‌ சிவ‌ச‌க்தில‌ போட்ட‌து தான்.


சிவ‌ச‌க்தில‌ பிட் ப‌ட‌ம் போட்டு அப்ப‌ப்ப‌ போலீஸ் கேஸ் ஆச்சுனும் லெக்ஷ்மில‌ அந்த‌ மாதிரிப் ப‌ட‌ங்க‌ள் போடும் ஓட்ட‌ முடிய‌ல‌னு லீஸ்ல‌ விட‌ முடிவு ப‌ண்ணி பூட்டிப் போட்டிருக்காங்க‌னும் சொல்லிக்கிறாங்க‌. உண்மையானு தெரில‌.

லெக்ஷ்மி தியேட்ட‌ர் தாண்டுற‌ப்ப‌ ம‌ட்டும் புன்ன‌கை ம‌ன்ன‌ன் ப‌ட‌த்துக்கு முத‌ல் நாள் ஷோவுக்கு வ‌ந்து கூட்ட‌த்துல‌ அடிச்சிப் பிடிச்சு டிக்கெட் வாங்கின‌து ம‌ன‌சுல‌ ஓடினாலும்-

பூடிய‌ க‌த‌வுக‌ளுக‌ளோடு அமைதியாக‌ லெக்ஷ்மி தியேட்ட‌ர் க‌ட‌க்கிற‌து.

மேலும வாசிங்க...

ம‌ழைசாலையில் திரும்பிப் பார்த்தல்...

>> Sunday, 8 November 2009

இனிய தமயந்தி.....

மிக நேர்த்தியாக இருக்கும் தள வடிவமைப்பு படிக்கும் ஆர்வத்தை தொடர்ந்து தக்க வைக்கிறது.

சரளமாக இருக்கும் எழுத்துநடை.. பகிரும் செய்தியை மனதில் எளிதில் பதிய வைக்கிறது.
எழுத்து வன்மை மிளிர்கிறது...

நான் வாசிக்கும்போது மெலிதாய் உறுத்துவது சில எழுத்துகளின் இடமாறிய புள்ளிகள் மட்டுமே

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.... உங்களிடமிருந்து.... தொடர்ந்து...



கதிர் - ஈரோடு



2...

நீங்கள் எழுதிய முதல் கதை ஒன்றின் பெயரையே வலைப்பூவின் தலைப்பாக வைத்ததாகச் சொன்ன ஞாபகம். ஆனால் உங்களின் வலைப்பூ உங்கள் வாழ்க்கையின் நடக்கின்ற நிஜங்களின் நிழல்களை தொடர்வது போன்ற எண்ணங்களை படிக்கின்ற தருணங்களில் தருகின்றது. ஆக வலைத்தளத்தின் தலைப்பு எங்களை உங்களின் நிழலை தொடரவைக்கும் உணர்வை கொடுப்பதால் வலைப்பெயர் சரியாகத்தான் உள்ளது.

உங்களின் ”இங்கிட்டு தமயந்தி அங்கிட்டு” உங்களோட டைரியை படிக்கிறது போல் ஒரு வகையில் உணர்வைத் தந்தாலும்(எ.கா, சென்ற வாரம் _ போயிருந்தேன்) சம்பவ நிகழ்வுகளுக்கு உங்களின் கருத்துரையாக நெல்லைத் தமிழின் நக்கல் ஃபாருமுலாவும் சிறப்பூட்டுகிறது. கருத்து கம்மியா இட்டாலும் காரமா இடுறீங்க.. அப்புறம் உங்களின் படைப்புகளை வெளியிடும் பொழுதும், ஊடகங்களில் உங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் போதும், இவ்ளோ பெரிய ஆளு வலைத்தளத்தை மேய்ந்திட்டிருக்கோம்ற பெருமையும் கூட சேர்ந்து வருது.


இவை தவிர, வேறு எதாவது புதுசா அரசியல், பொருளாதாரம், தீர்வுகள் தொடர்பா கட்டுரை எழுதி கலக்கலாமே? நீங்க எழுத்தாளர், கதாசிரியர் என்பதால் கதை எழுதுவது எப்படி, கட்டுரை எழுதுவது எப்படி என போட்டி வைச்சு எங்களுக்குள்ள திறமையை வெளிக்கொணரலாமே?! சும்மாகாச்சும் பரிசு தர்றேன்னு பாவலா காட்டுறதவிட்டுட்டு மெய்யாலுமே கவிதை போட்டி, கட்டுரைப் போட்டி, நிழற்பட போட்டி வைச்சு கலக்கலாமே ?!


அதுக்கப்புறம் உங்க தளத்திலே பிடிச்சது வலைப்பூவின் வண்ணமும், வடிவமைப்பும்.. ( நான் தானே வடிவமைச்சேன்.. ஆதலால்.. ... )





வாழ்க தமிழுடன்,

தமிழ் நிலவன்.


3...

என்னுடைய ஒரு பதிவில் ‘உங்களால் நானும் வலைப்பூ ஆரம்பித்தேன்' என்று தமயந்தி அவர்களின் ஒரு பின்னூட்டம். சென்று பார்த்தேன். நிழல் வலை. பெயரே என்னை ஈர்த்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வலப்பக்கம் அவரது மகாத்மியங்களைக் கண்டதும் அடங்கிப் போனேன்.. இப்பேர்ப்பட்ட எழுத்துகளுக்குச் சொந்தக்காரரை சாதாரணமாக எண்ணிவிட்டேனோவென வருந்தினேன்.

இவரெழுதுவதில் தவறாமல் ‘இங்கிட்டு' இருந்து கொண்டு நான் படிப்பது இங்கிட்டு தமயந்தி அங்கிட்டு யாரு-தான். சின்ன சின்ன வரிகளில் சொல்ல வந்ததை நச்செனச் சொல்லி முடிக்கும் இவரின் அந்த வகை எழுத்துகள் மிகப் பிடிக்கும். அதேபோல இலங்கை நிலவரங்கள் குறித்த இவரது கனமான எழுத்துகளும் பிடிக்கும்!

இவர் வைக்கும் தலைப்புகள் என்னை மிக ரசிக்க வைக்கும்: சமீபத்தில் இவர் வைத்திருந்த ஒரு தலைப்பு: பக்கத்துவீடும் ராணியக்காவும் மெதுதோசையும். இன்னொன்றுக்கு தலைப்பு: ‘நிற்க'!!!!!






--
அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா

4...

நிழல்வலை.

வாழ்வின் வெயில் நேரத் துயரங்களை நிழல் பக்கம் வலை பின்னுபவர்.

எதார்த்தமான நடையில் அங்கிட்டிங்கு என்று எழுதுகிறாரே என்று நினைத்தால்,இல்லை.இவரின் வெளி வேறாக இருக்கிறது.

சிறுபத்திரிகை உலகிலும்,இலக்கிய வட்டத்திலும்,பத்திரிகை உலகிலும் இவரின் பெயர் மிகத் தெளிவாக தெரிந்திருக்கிறது.குமுதம் இவர்களைப் பற்றி..என்று இலக்கிய எழுத்தாளார்கள் பற்றி வரும் இரண்டு வரிகளில் இவர்ப் பெயரைப் பார்த்ததில் இருந்து தான் மேற்சொன்ன விசயங்கள் தெரிந்தது.

காத்திரமான எழுத்தாகவும் அதே சமயம் மொழி நடையின் வீச்சிலும் நேர்புள்ளியில் பயணிக்கும் எழுத்து.சமீபத்திய உதாரணம் ராஜபக்‌ஷேக்கு கடிதம்.

இவர் போன்ற இலக்கிய ஆர்வலகள் என் போன்ற பதிவர்களின் எழுத்தைப் படிக்கிறார்கள் என்பதே மிகப் பெருமை.

நிறைய எழுதுங்கள் தோழர்.

அன்புடன்





நர்சிம்


5...

நிழல்வலை

முதல் முறை இந்த வலைப்பக்கத்தில் நான் படித்தது இங்கிட்டு தமயந்தி.... தான். படித்துவிட்டுநெல்லை பாஷை கொண்ட எழுத்து நடை ஏனோ இதை எழுதியது ஒரு பெண்ணாக இருக்க முடியுமா என்றசந்தேகத்தைத்தான் கிளப்பியது.

அவ்வளவு எஃபெக்ட்டிவ்வான எழுத்து நடை :)))

அதுதான் என்னை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டியது.

உங்களின் கவிதை, சிறுகதைகள், பிற கவிதைப் பகிர்வுகள் மற்றும் அரசியல், சினிமாவை நையாண்டி செய்யும் விதமும் மிகவும் பிடித்தமானது.

மேலும் சில பதிவுகளில் நீங்கள் கடைசியாக விட்டுச்செல்லும் வார்த்தைகள் மனதை விட்டு வெகு நேரத்துக்கு அகலாது. அந்த அளவுக்குதாக்கத்தை தரும் வார்த்தைகள் அவை.

தொடர்ந்து படிக்கக்கொடுங்கள் உங்கள் அருமையான எழுத்துநடையை எங்களுக்கு.

நன்றி

அமித்து அம்மா

மேலும வாசிங்க...

ஏபிடி ப‌ஸ்..சீட் ந‌ம்ப‌ர் 18, 05 -11-09,அதிகாலை 1:45 :



போன‌ வார‌ம் புத‌ன்கிழ‌மை ஊருக்குப் போயிருந்தேன். பெண்க‌ள் த‌னியாக‌ப் ப‌ய‌ணிக்கையில் கொடுக்க‌ப்ப‌டும் எச்ச‌ரிக்கை ம‌ணி என‌க்கு ஒவ்வாத‌வை.ஒடுக்குமுறையின் முத‌ல் புள்ளி அப்ப‌டிப்ப‌ட்ட‌ அறிவுரைக‌ளிலேயே ஆர‌ம்பமாகுது என்கிற‌ தீர்மான‌ம் என‌க்கு உண்டு.


ம‌ழை ஆக்ரோஷ‌மாய் பெய்து அந்த‌ ஏ.பி.டி பேருந்தின் பெரிய‌ க‌ண்ணாடிக் க‌த‌வுக‌ளை ந‌னைத்த‌ப‌டி இருந்த‌து.ஏசியின் குளிரை மேலிருந்த‌ குப்பியை சாத்தி அணித்தேன். டிவிடியில் கில்லியில் விஜ‌ய் அவ‌ர் த‌ங்கையிட‌ம் "ச‌ச்சின் வ‌நதிருக்காக‌! ஐஸ்வ‌ர்யா ராய் வ‌நதிருக்காக‌"என்று காம‌டி செய்து கொண்டிருந்தார்.

ம‌ன‌தில் நிறைய‌ குழ‌ப்ப‌ங்க‌ளுட‌ன் வெளியே ந‌க‌ர்ந்த‌ இருளை வெறித்த‌ப‌டி வ‌ந்தேன். முன் இருக்கையில் இர‌ண்டு பெண்க‌ள் அம‌ர்ந்திருந்த‌ன‌ர். ஒரே வ‌ய‌தின‌ராய் இருந்த கார‌ண‌த்தாலும் அதில் ஒரு பெண்ணுக்காக‌ பேருந்து நீண்ட‌ நேர‌மாக‌ நின்ற‌தாலும் "ஏன் லேட்" என்று இய‌ல்பாக‌ ஆர‌ம்பித்த‌ அவ‌ர்க‌ளின் ச‌ம்பாஷ‌ணை ம‌ழைப் ப‌ற்றி தொட‌ர்ந்த‌து. கொண்டு வ‌ந்திருந்த‌ சான்ட்‍விச்சை ப‌க்க‌த்து சீட் பெண்ணிட‌ம் கொடுத்து ப‌கிர்ந்த‌ப‌டி ஜ‌ன்ன‌லோர‌ப் பெண் ப‌ட‌த்தை க‌வ‌னிக்க‌ ஆர‌ம்பித்தாள்.




ம‌ழை நேர‌ம் ப‌ய‌ணிப்ப‌து குளிரை மீறியும் நினைவுக‌ளோடே ப‌ய‌ணிப்ப‌து போன்ற‌தாகும்.அலைபேசியின் ம்யூசிக் ப்ளேய‌ரில் "மாலை நேர‌ம்..ம‌ழைத் தூறும் கால‌ம்"பாட‌லை ச‌த்த‌மாக‌ ஹெட் செட்டில் வைத்த‌ப‌டி ம‌ழையை விள‌க்கொளியில் அது சித‌றி விழும் வித்தையைப் பார்த்த‌ப‌டி இருந்தேன். எப்போது என் க‌ண்க‌ள் மூடின‌ என்று தெரிய‌வில்லை.

ச‌ரியாக‌ 1:45 ம‌ணி இருக்கும். அருவெறுக்க‌த்த‌க்க‌வித‌மாய் ஒரு கை என்ப‌க்க‌மாய் வ‌ந்து விழுந்த‌து. திடுக்கென்று முழித்து "யார்டா அது?" என்று ச‌த்த‌ம் போட்டேன்.அவ‌ன் என் சீட்டில் ச‌ரிந்து தூங்குவ‌து போல் பாவ‌னை செய்து கொண்டிருந்தான். சுற்றி இருந்த‌ ஜீன்ஸ்பெண்ட் ,டீ ஷ‌ர்ட் போட்ட‌ ப‌த்துக்கும் மேலிருந்த‌ "ஆண்" சிங்க‌ங்க‌ள் என்ன‌ பிர‌ச்னை என்று கூட‌ கேட்க‌ ம‌ற‌ந்து என்னையே பார்த்தார்க‌ள். ஒரு நிமிட‌ம் யோசித்தேன். உத‌விய‌ற்ற‌ அந்த‌ த‌ருண‌ம் த‌ந்த‌ ம‌ன‌த்தைரிய‌த்தில் எழுந்து நின்று டிரைவ‌ர் காபினைத் திற‌க்குமாறு சொன்னேன். அதை முன் இருக்கையில் பாட‌க‌ர் ச‌த்ய‌னை மாதிரி இருந்த‌ ஒருவ‌ர் செய்தார். ப‌ஸ் ஓர‌மாக‌ நின்று டிரைவ‌ரில் ஒருவ‌ர் உள்ளே வ‌ந்து தூங்குவ‌து போல் பாவ‌னை செய்து ப‌டுத்திருந்த‌ அவ‌னை எழுப்பினார்.

"என்ன‌டா ப‌ண்ணே?லேடீஸ் க‌ம்ப்ளேயின் ப‌ண்றாங்க‌?"

"நான் அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆளில்ல‌.."குப்பென்று ச‌ர‌க்கு வாடை..

"பின்னாடி சீட்ல‌ உக்காரு" அவ‌ன் ஏதும் பேசாம‌ல் பின் சீட்டில் போய் உட்கார்ந்திருந்தான்.க‌ம்ப‌ளியை சர்வ‌சாதார‌ண‌மாக‌ போர்த்திக் கொண்டு தூங்க‌ ஆர‌ம்பித்தான்.





என‌க்கு உட‌ல் ஒரு வினாடி அதிர்ந்த‌து. அவ‌ன‌து மிருக‌த்த‌ன‌மான‌ பொறுக்கித்த‌ன‌த்துக்கான‌ த‌ண்ட‌னை பின் சீட்டில் தூங்குவ‌து தான் என்றால் அவ‌ன‌து அடுத்த‌ பேருந்து ப‌ய‌ணத்திலும் எந்த‌ப் பெண்ணும் ப‌ய‌ணிக்க‌ முடியாது இல்லையா? ம‌றுவினாடி வெங்க‌டேஷுக்கு போன் செய்தேன். அம‌தியாய்,தைரிய‌மாய் இருக்கும்ப‌டியும் ப‌ஸ்ஸ்டான்டுக்கு தான் வ‌ருவ‌தாக‌வும் சொன்ன‌வ‌ர் 2:15க்கே ஜ‌ங்க்ஷ‌ன் வ‌ந்தார்.

பேருந்தில் ஏசி கோளாறு ஏற்ப‌ட்டு கிட்ட‌த்த‌ட்ட‌ 5 ம‌ணிக்கே நெல்லை வ்ந‌தேன். ப்ஸ் நின்ற‌தும் கீழே இற‌ங்கினேன். வெங்க‌டேஷிட‌ம் இவ‌ன் தான் என்று காட்டினேன். அவ‌ன் தூங்குவ‌து போல‌வே இருந்தான்.மேலே ஏறி "உன் சீட் ந‌ம்ப‌ர் என்ன‌ "என்று கேட்டார்.


"18 "என்றான்.ஆனால் அவ‌ன் ந‌டுநிசியில் என‌க்குப் பின்னால் அம‌ர்ந்திருந்த‌து 10 ந‌ம்ப‌ர் சீட்.

"இற‌ங்குடா" என்றார் வெங்க‌டேஷ்.

அவ‌ன் இற‌ங்கிய‌தும் ஓங்கி அடித்தேன் ."தெரியாம‌ செஞ்சிட்டேன்"என்றான் அவ‌ன் ப‌த‌றின‌ப‌டி. இப்பொழுதும் ஏபிடி அப்ப‌ர் மிடில் க்ளாஸ் "ஆண்" சிங்க‌ங்க‌ள் பார்த்த‌ப‌டியே இருந்தார்க‌ள். முன் இருக்கை இர‌ண்டு பெண்க‌ளில் ஒருத்தி அவ‌ச‌ர அவ‌ச‌ர‌மாக‌ இற‌ங்கி காத்திருந்த‌ அப்பாவின் பைக்கில் ஏறி ம‌றைந்தாள்.நான் ச‌ட்டென்று செல்போனின் காம‌ராவை ஆன் ப‌ண்ணி அவ‌னை ப‌ட‌ம் எடுக்க‌ப் போனேன்.

அவ‌ன் சுதாரித்து செம்மீன் ஹோட்ட‌ல் ப‌க்க‌மாய் ஓடினான்."அவ‌ன‌ப் பிடிங்க‌" என்று அல‌றின‌ ப‌டி நானும் ராஜா பில்டிங் சாலையில் ஓடினேன். ஆட்டோ டிரைவ‌ர்க‌ள் அவ‌னை செம்மீன் ஹோட்ட‌ல் தாண்டிய‌ வ‌ளைவில் சுற்றிப் பிடித்தார்க‌ள்.ப‌ஸ்ஸ்டாண்டில் இருக்கும் புற‌ந‌க‌ர் காவ‌ல் நிலைய‌ போலீசிட‌ம் போய் சொன்னேன்.

அவ‌ன் பெய‌ர் ராஜா என்றும் நாக‌ர்கோவில் செட்டிக்குள‌த்தை சேர்ந்த‌வ‌ன் என்றும் சென்னையில் ஏதோ வேலை பார்ப்ப‌தாக‌வும் சொன்னான்.

சீக்கிர‌மே ஃபாரின் போவ‌தாக‌வும் இர‌ண்டு குழ‌ந்தைக‌ள் இருப்ப‌தாக‌வும் அவ‌ர்க‌ளுக்குத் தெரிந்தால் த‌ற்கொலை ப‌ண்ணிக் கொள்வார்க‌ள் என்றும் சொன்னான்.வெளிநாட்டுக்கு செல்லும் அவ‌ன் அங்கும் பெண்க‌ளிட‌ம் த‌வ‌றாக‌ ந‌ட‌ந்து கொள்ள‌க் கூடும்.வெளியே சொல்ல‌ த‌ய‌ங்கும்,சொல்ல‌ இய‌லாத‌ பெண்க‌ளால் அவ‌ன‌து திமிர் வ‌ள‌ரக் கூடும்.

அப்போதும் அவ‌ன் மேல் பிர‌தான‌ ந‌ம்பிக்கையுட‌ன் அவ‌ன் ம‌னைவி தூங்கிக் கொண்டிருக்க‌லாம்.

பின் குறிப்பு : மேல் குறிப்பிட்ட‌ திக‌தி.. நேர‌ம்..சீட் ந‌ம்ப‌ர் அவ‌ன் ம‌னைவிக்கு அவ‌னை அடையாள‌ம் காட்ட‌ ம‌ட்டுமே)

மேலும வாசிங்க...

Designed & Maintained by